tamilnadu

img

ஜிடிபி 5.1 சதவிகிதமாக குறையும்.... தெற்காசியாவிலேயே இந்தியாவின் நிலை மோசம்

புதுதில்லி:
நடப்பு 2019-20 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவிகிதமாகவே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சிவங்கி கணித்துள்ளது.இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, 7 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதமாக ஆசியவளர்ச்சி வங்கி குறைத்திருந்தது. தற்போது, அதிலிருந்து மேலும் 1.4 சதவிகிதத்தை அதிரடியாக குறைத்துக் கொண் டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையொன்றை ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதில், “தெற்காசியாவில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான் மிகக் குறைவு” என்று கூறியுள்ள ஆசிய வளர்ச்சி வங்கி, 2018-ஆம்ஆண்டில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் வழங்குவதிலும் பிரச்சனைகளைச் சந்தித்ததாகவும், இவற்றை வளர்ச்சிக்குறைவுக்கான முக்கியக் காரணங்களாகப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.மேலும், “மக்களின் நுகர்வுப் பழக்கம்குறைந்தது; வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை;கிராமப்புறங்களில் நிலவும் பொருளாதாரத் தேக்கம், விவசாயம் தொடர்பான பிரச்சனை, கடன் வழங்குவதில் பற்றாக் குறை ஆகியவையும் வளர்ச்சிக் குறைவுக்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளது.முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) 6.1 சதவிகிதமாகவும், உலக வங்கி 6 சதவிகிதமாகவும் கணித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 5 சதவிகிதம் என்று கூறியிருந்தது. தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியும் இதனையொட்டியே கணிப்பு வெளியிட்டுள்ளது.

;